பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 2,000/- வழங்கப்படும்…! அரசு ஊழியர்களுக்கும் உண்டு..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
தமிழக மக்களால் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் இந்த பொங்கல் திருநாளை எவ்வித வறுமையும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டம் முன்பு அரசு ஊழியர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது இந்த திட்டம் திருத்தப்பட்டு, அரசு ஊழியர்களுக்கும் ரூ. 1,000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களுக்கு மாதா மாதம் 15-ம் தேதிக்குள் அவர்களின் வங்கி கணக்கில் ரூ 1,000/- வரவு வைக்கப்படுகிறது.
அவ்வாறு வரவு வைக்கப்படும் தொகை இந்த மாதம் 10-ம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பரிசாக ரூ. 1,000/- வழங்கும் போதே இந்த தொகையும் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதாவது, மொத்த தொகையாக ரூ.2,000/- உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment